என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிற்பழகுநர் பயிற்சி"
- உளுந்தூர்பேட்டையில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
- தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் உளுந்தூர்பேட்டையில் பயிற்சிசேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் வருகின்ற 11-ந் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்நடை பெறவுள்ளது எனமாவட்ட கலெக்டர்ஸ்ரீதர் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் உளுந்தூர்பேட்டையில் பயிற்சிசேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இந்த தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாமில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஆவின் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும்சிறு,குறு மற்றும் நடுத்தரதொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் என்.சி.வி.டி, மற்றும் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழில் பழகுநராக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும். இதனைதொடர்ந்து ஓராண்டுமுதல்2- ஆண்டுகள்வரை தொழில் பழகுநர் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இந்த பயிற்சியின் போது மாதாந்திர உதவித்தொகை ரூ.8,500 முதல் ரூ.10,000 வரைநிறுவனத்தால் வழங்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ள இளைஞர்கள் தொழிற்பயிற்சி சேர்க்கை முகாமினை பயன்படுத்தி க்கொள்ளலாம்.
இவ்வாறுஅதில் கூறப்பட்டுஉள்ளது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7000 முதல் நிறுவனத்தால் வழங்கப்படும்.
- இச்சான்றிதல் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணிபுரிந்திட பயனுள்ளதாக அமையும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் தஞ்சாவூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் பிரசர் அப்ரன்டீசாக சேர்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படைப் பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதல் பெறலாம்.
இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7000 முதல் நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதல் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணிபுரிந்திட பயனுள்ளதாக அமையும்.
மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தஞ்சாவூர். தொலை பேசி எண்: 04362-278222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்